நடிகர் சிம்புவுக்கும் நடிகர் ஜீவாவுக்கும் இடையேயான புயல் ஒரு வழியாக ஓய்ந்து விட்டதாக தெரிகிறது. காரணம் இருவரும் டுவீட்டர் மூலம் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பாராட்டும் வாழ்த்துகளையும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
திரையுலகில் வழக்கமாக நடிகைகளுகிடையே தான் மோதல் நிகழ்வது வழக்கம். ஆனால், அண்மையக் காலமாக நடிகர்களுக்கிடையேயும் புயல் கிளம்பத் தொடங்கியிருக்கிறது. இளையத் தளபதி விஜய், அஜீத் மோதல், தனுஷ்-சிம்பு மோதல் நாடறிந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து சிம்புவுக்கும் ஜீவாவுக்கும் இடையே மோதல் உருவானது. இருவரும் தாங்கள் இஷ்ட படி தனித்தனியாக ஒருவரை மற்றொருவர் விமர்சித்து வந்தனர். “கோ” பட வெற்றியால் வந்த மோதல் என கூறப்பட்டது.
ஆனால் இந்நிலை தற்போது மாறி இருவரும் ஒருவரை ஒருவர் டுவீட்டர் மூலம் பாராட்டிக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக சிம்பு, “நண்பன் டிரேய்லரைப் பார்த்தேன் ஜீவா நடிப்பு பிரமாதம். அவரது தோற்றமும் சிறப்பாக உள்ளது. படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் ஜீவாவிற்குத் தெரிவித்துக் கொள்வதாக சிம்பு கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜீவா சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாராட்டுக்கு நன்றி, விரைவில் சந்திக்கிறேன் என ஜீவா கூறியுள்ளார்.
இனி சிம்புவும் ஜீவாவும் நண்பவர்களாகிவிடுவார்களா..?
0 கருத்துரைகள்:
Post a Comment