Home » » இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது

இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது

Written By edupudi on Jan 4, 2012 | 10:37 AM

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை குறித்து இன்று அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது .  முன்னதாக,


கடந்த 1967-ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும்  பிரச்னை இருந்து வருகிறது. இஸ்ரேலின் மேற்குக்கரை, காஸா, ரமல்லாஹ் உள்ளிட்ட பகுதிகளை, பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமித்து தனி நாடு கோரி போராடி வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து பலகட்ட முயற்சிகள் நடந்து வந்தாலும், இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த அமைதி பேச்சுவார்த்தை இன்று ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரில் நடைபெற்றது.

இதில் இஸ்ரேல் தூதரக அதிகாரி, இட்சாக்மொல்சோ, பாலஸ்தீன அமைதிப்பேச்சுவார்த்தை குழு அதிகாரி சாயீப்இர்காத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு முன் பாலஸ்தீனத்தின் ரமல்லாஹ் நகரில் செய்தியாளர்களிடம் சாயீப்இர்காத், பேச்சுவார்த்தையில் நல்ல தீ்ர்வு எட்டப்படும் என்றும், ஜோர்டான் இதில் முக்கிய பங்களிக்கும் என்றும் தாம் நம்புவதாக கூறினார். கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைதிப்பேச்சுவார்த்தை நடந்தது. ஒரு ஆண்டு கழித்து மீண்டும் இன்று துவங்கியது.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger