Home » » யாங்கோனில் பயங்கர வெடிப்பு: 17 பேர் பலி, 80 பேர் படுகாயம்

யாங்கோனில் பயங்கர வெடிப்பு: 17 பேர் பலி, 80 பேர் படுகாயம்

Written By edupudi on Dec 29, 2011 | 10:52 AM


இன்று அதிகாலை 2 மணிக்கு மியன்மார், யாங்கோனில் உள்ள புறநகர்ப் பகுதியில் நிகழ்ந்த பலத்த வெடிப்புச்சம்பவத்தில் 17 பேர் பலியான
வேளையில், 80 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவத்தில் இறந்தவர்களின் தொகை 50 ஆக இருக்கலாம் என நம்மப்படும் அதேவேளை இன்று காலை 6 மணி வரையில்  12 ஆண்கள் மற்றும் 5 பெண்களின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதலில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் சிறு சிறு வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தார். 
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு பொலிஸாரை தொடர்புகொண்ட போது
“பாதிப்புகள் தொடர்பான மேலதிக  விஷயங்களைத் தெரிவிக்க வேண்டிய நிலையில் நாங்கள் இப்போது இல்லை” என மிங்களார் தாவுங்யண்ட் பட்டணத்தைச் சேர்ந்த காவல்துறை துணை அதிகாரிகள்தெரிவித்தனர்

இந்த வெடிப்பினால் ஏற்பட்ட பலத்த சத்தம் மத்திய மற்றும் கிழக்கு யாங்கோன் பகுதி மக்களுக்கும் கேட்டதால், அங்குள்ள மக்கள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
இந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து யாங்கோன் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதலில், தீ அருகில் இருந்த கப்பல் பட்டறையிலிருந்து பரவியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger