வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் இன்சூரன்ஸ திட்டம் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று துவங்கிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது : வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் துவங்கப்படும்; நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்; வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்படும்; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது; வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூக மக்களின் நலனுக்காக இந்திய அரசும், இந்திய மக்களும் பெருமளவில் பங்காற்றி வருகின்றனர்; நவீன இந்தியாவை உருவாக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் குறித்து தெரிவித்த பிரதமர், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது : நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதமாக உயரும் என எதிர்பார்கிறேன்; தற்போது உள்நாட்டு உற்பத்தியால் உள்நாட்டு சேமிப்பு 33 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது; சர்வதேச சந்தைகளின் சரிவு காரணமாக இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது; பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்; இந்திய தொழில் வளர்ச்சியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 1900 பேர் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று துவங்கிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது : வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் துவங்கப்படும்; நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்; வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்படும்; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது; வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூக மக்களின் நலனுக்காக இந்திய அரசும், இந்திய மக்களும் பெருமளவில் பங்காற்றி வருகின்றனர்; நவீன இந்தியாவை உருவாக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் குறித்து தெரிவித்த பிரதமர், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது : நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதமாக உயரும் என எதிர்பார்கிறேன்; தற்போது உள்நாட்டு உற்பத்தியால் உள்நாட்டு சேமிப்பு 33 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது; சர்வதேச சந்தைகளின் சரிவு காரணமாக இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது; பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்; இந்திய தொழில் வளர்ச்சியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 1900 பேர் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment