இன்று அதிகாலை இந்தோனேசியா ஆச்சேவில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. ஆயினும், இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிருடற்சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
மேலும் அதிகாரிகள் வெளியிட்ட சுனாமி எச்சரிக்கையை நிலநடுக்கம் ஏற்பட்டப் பின் திரும்ப மீட்டுக் கொண்டனர்.
இந்நிலநடுக்கம் இன்று காலை 1.36 மணிக்கு நிகழ்ந்தது. அந்நிலநடுக்கத்தை பண்டா ஆச்சே மக்கள் உணர்ந்ததாகவும் அதே நேரத்தில் பலத்த காற்று வீசியதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுனாமி எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பதட்டமான சூழ்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
0 கருத்துரைகள்:
Post a Comment