Home » , » ரேஷன்கடையில் 2 முறை மண்ணெண்ணெய் வாங்கிய சோனியா காந்தி

ரேஷன்கடையில் 2 முறை மண்ணெண்ணெய் வாங்கிய சோனியா காந்தி

Written By edupudi on Jan 12, 2012 | 10:28 AM

காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராவில் சோனியா காந்தி பெயரில் போலி ரேஷன் கார்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ் நகரை சேர்ந்தவர் பிரேம்சந்த் ஜா.
தகவல் உரிமை ஆர்வலர். இவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயரில் உள்ள போலி ரேஷன் கார்டை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

இந்த ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியாக சோனியா காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. குடும்ப உறுப்பினர்களாக பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. எண். 10, ஜன்பத் ரோடு, புதுடெல்லி, என்ற முகவரி உள்ளது. இதில், சோனியாவின் ஆண்டு வருமானம் ஸி30 ஆயிரம் என்றும், அவரிடம் 2 காஸ் சிலிண்டர்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வரிசை எண்& 033384 கொண்ட இந்த ரேஷன் கார்டு, தானே மாவட்டத்தின் 41வது எண் ரேஷன் அலுவலகத்தில் இருந்து 2011, டிசம்பர் 10ம் தேதி விநியோகிக்கப்பட்டுள்ளது. 

இதில் மற்றொரு சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த கார்டு மூலம் கடந்த 2 மாதங்களில் 2 முறை மண்ணெண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. சோனியா பெயரிலான இந்த போலி ரேஷன் கார்டு தனக்கு எப்படி கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட மறுத்த பிரேம்சந்த் ஜா, தானே மாவட்ட அலுவலகத்தில் இது தயாரிக்கப்பட்டு இருப்பதால், அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger