Home » » 16 வருடங்களுக்கு முன் கானாமல் போன வைர மோதிரம் கரட் தோட்டதில் கண்டுபிடிப்பு

16 வருடங்களுக்கு முன் கானாமல் போன வைர மோதிரம் கரட் தோட்டதில் கண்டுபிடிப்பு

Written By edupudi on Jan 4, 2012 | 10:02 AM

16 வருடங்களுக்கு முன் திருமண பரிசாக கிடைத்த வைர மோதிரத்தை தொலைத்து அதனை மீளக் கண்டெடுத்த சம்பவம் ஒன்று சுவீடனில் இடம்பெற்றுள்ளது.


லனா பல்சன் என்ற பெண்மணிக்கே இவ் ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பம் தொடர்பாக லனா பல்சன் கருத்து  தெரிவிக்கையில்

16 வருடங்களுக்கு முன் (1995) தனது திருமண பரிசாக கிடைத்த 7 வைரங்கள் பதிக்கப்பட்ட மோதிரத்தினை தவறவிட்டுவிட்டேன்.வீட்டுசமயல் அறைமுதல் அனைத்து இடங்களிலும் தேடி மோதிரம் கிடைக்க வில்லை.மோதிரம் கிடைக்காதது வருத்தத்தை தந்தாலும் அத்துடன் தேடுவதை நிறுத்திவிட்டோம்.

அண்மையில் தோட்டத்தில் எடுத்த புகைப்படமொன்றில் கரட் ஒன்றின் மேல் ஏதோ ஒன்று மாட்டியிருப்பது போன்றிருந்தது பின் அவ்விடம் சென்று பார்த்த போது அது  காணாமல் போன என்னுடைய மோதிரமாக இருந்தது.

எனக்கு ஆச்சரியமாகவும் மிகவும் சந்தோசமாகவும் இருந்தது.என்று கூறினார்.
இதில் அதிசயிக்க தக்க விடயம் என்னவென்றால் அவ் மோதிரத்தை லனா அணிந்த போது அது. 16 வருடங்களுக்கு முன் எவ்வறு இலேசாக அணியப்பட்டதோ அவ்வாறே இப்போதும் அது அணியப்பட்டது.

மீளப்பெற்ற மோதிரத்தின் மூலம் தான் புதிதாக திருமணம் முடித்தது போன்றுள்ளதாகவும் இனிமேல் மோதிரத்தில் அதிக கவணம் செலுத்தி இதனை பாது காப்பாக வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்



Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger