Home » » 'லக்பிம நியூஸ்' ஆசிரியர் மீது தாக்குதல்

'லக்பிம நியூஸ்' ஆசிரியர் மீது தாக்குதல்

Written By edupudi on Dec 5, 2011 | 2:28 PM

கொழும்பு, கறுவாத் தோட்டத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகளுக்கான வருடாந்த ஒன்று கூடல் வைபவத்தின்போது, தான் சட்டத்தரணி ஒருவரால்
தாக்குதலுக்குள்ளானதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 'லக்பிம நியூஸ்' பத்திரிகையின் ஆசிரியர் ராஜ்பால் அபே நாயக்க முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் நீதியரசர் தொடர்பாக கருத்து வெளியிட்டதன் காரணமாகவேதான் தாக்கப்பட்டதாக ராஜ்பால் அபேநாயக்க தெரிவித் துள்ளார். இதன்போது ராஜ்பால் அபேநாயக்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.

இது தொடர்பில் நான் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என அவர் கூறினார். கொள்ளுப்பிட்டி பொலிஸார், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger