பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் சிறிய பிரச்னைக்கு கூட சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் குண்துஸ் மாகாணத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 3 பெண்கள் உள்ளனர். அவர்களில் 18 வயது நிரம்பிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வாலிபர் ஒருவர் விரும்பி உள்ளார். அவருக்கு திருமணம் செய்து கொடுக்க பெண்ணின் தந்தை மறுத்துவிட்டார்.
சமீபத்தில் அந்த பெண்ணுக்கும் உறவினர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளிகளுடன் கடந்த வியாழக்கிழமை(1.12.2011) நள்ளிரவு பயங்கர ஆயுதங்களுடன் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று, பொருட்களை அடித்து நொறுக்கினார்.
இளம்பெண், அவருடைய 2 சகோதரிகள், தாய், தந்தையை அடித்து உதைத்து அவர்கள் மீது ஆசிட் வீசி சென்றனர். ஐந்து பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
இதில் இளம்பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று வைத்தியர் அப்துல் ஷோகுர் ரகிமி தெரிவித்துள்ளார். ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment