Home » » தமன்னா பேனர்கள் தூசு தட்டப்படுகறது

தமன்னா பேனர்கள் தூசு தட்டப்படுகறது

Written By edupudi on Jan 10, 2012 | 10:38 AM

அள்ளிக் கட்டி பரணில் போட்ட தமன்னா பேனர்களையெல்லாம் மீண்டும் ஒருமுறை தூசு தட்டி எடுத்து வைத்துக் கொள்வது அவரது ரசிகர் மன்றத்தினருக்கு நல்லது. ஏனென்றால் மீண்டும் தமிழ் படங்களின் மீது ஆசை வந்திருக்கிறதாம் தமன்னாவுக்கு.

கோடம்பாக்க மேனேஜர்கள் சிலருக்கு சமீபத்தில் வந்த போன், இன்ப தேனன்றி வேறில்லை. யார் யாருக்கு பார்க்கிறீங்க? இடையில் நமக்கும் பார்க்கறதுன்னா என்ன ஃபார்மாலிடிஸ் என்றெல்லாம் ஆசையை து£ண்டினாராம் தமன்னா. ஒண்ணுமே வேணாம் என்று து£ண்டில் போட்டவர்களுக்கும், பத்து பர்சென்ட் என்று பம்மாத்து காட்டியவர்களுக்கும் ஏப்ரல் வரைக்கும் பொறுங்க என்பதுதான் தமன்னாவின் தற்போதைய பதில்.

ஆந்திரா பக்கம் விசாரித்தால், அவ்வளவும் உண்மைதான் என்கிற தகவல். அங்குள்ள படங்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டுகள் அத்தனையும் ஏப்ரலோடு முடிகிறதாம். அதன்பின் தமிழ் படங்களைதான் மனதில் நினைத்திருக்கிறாராம் அவர்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger