Home » » ஹர்பஜன் சிங்கின் பேக் திருடப்பட்டது

ஹர்பஜன் சிங்கின் பேக் திருடப்பட்டது

Written By edupudi on Dec 14, 2011 | 12:54 PM

"கிரெடிட் கார்டு' உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய ஹர்பஜன் சிங்கின் திருடப்பட்ட "பேக்', அரியானா போலீசாரால் மீட்கப்பட்டது.



நேற்று முன்தினம், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது நண்பருடன் டில்லி வந்தார். இவர், கர்னால் அருகில் உள்ள மதுபான் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு, டீ குடிக்க சென்றார். அப்போது அங்குவந்த மர்ம கும்பல், ஹர்பஜன் காரின் கண்ணாடியை உடைத்து "பாஸ்போர்ட்', பணம், "லைசென்ஸ்', "கிரெடிட் கார்டு' உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க பொருட்களுடன் கூடிய "பேக்கை' திருடிச் சென்றனர். இத்திருட்டு குறித்து, கர்னால் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.


இதுகுறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், நேற்று கர்னாலில் உள்ள "செக்டர் 13' என்ற இடத்தில் "பேக்கை' கண்டுபிடித்தனர். இதில் 34 "டெபிட் கார்டு', ஐந்து "ஏ.டி.எம்., கார்டு' மற்றும் அவரது உறவினரின் ஒரு "கிரீன் கார்டு' ஆகியவை இருந்தன. ஆனால் ரூ. 9,500 பணம், "பாஸ்போர்ட்', "லைசென்ஸ்' மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இல்லை.
காணமல் போன எஞ்சிய பொருட்கள் மற்றும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க ஐந்து குழுவாக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் இவர்கள் பிடிபடுவார்கள் என, கர்னால் போலீஸ் உயர் அதிகாரி ஜோகிந்தர் ராதி தெரிவித்துள்ளார்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger